Monday, June 14, 2010

கவிதைன்னு நீங்க சொன்ன கவிதைதான்.....

நானும் எங்கேனும் .....

நானும் தேசிய நெடுஞ்சாலையிலோ, புகை வண்டியிலோ , விமானத்திலோ பயணம் செய்பவன்...
நானும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவன்..
நானும் கடைசி ஓவரை நகம் கடித்து பார்க்கும் பலகீனமானவன்..
நானும் நிலத்தகராறில் என் சகோதரனுக்கு எதிரானவன்....
நானும் கூட்ட நெரிசலில் கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்பவன்....

அட இவ்வளவு ஏங்க...?.....

நானும் அடுத்தவன் மனைவியை கள்ளக்காதலிப்பவன்.......

நானும் நானும் நானும் நானும் நானும் ........
இப்படி எத்தனையோ நானும்கள் எனக்குள்ளும் இருப்பதால்...
தயை கூர்ந்து நண்பர்களே .....
தினமும் செய்தித்தாள் படியுங்கள்........

நானும் எங்கேனும் என்றேனும் செய்தியாக வரலாம்.....!

11 comments:

Unknown said...

super, but you r asked something this not a right way to in your life

Jyo said...

well written. nice

Unknown said...

hai unga kavithai super. ithu kavithaithan
kalainar, vaali , pa,vijay, vairamuthu eluthurathu ellam kavithaina ithum maha kavithai than. remba nalla iruku. keep it

KUTTI said...

சிவா,

ப்ரமாதம். கவிதை நன்றாக உள்ளது.

KEEP IT UP... ALL THE BEST.

MANO

KUTTI said...

pls remove the word verification.

mano

Unknown said...

செய்தித் தாளில் வர வேண்டுமென்பதற்க்காக இதெல்லாம் செய்யாதீர்கள் தோழரே :D ...
கவிதை அருமை.

Unknown said...

செய்தித் தாளில் வர வேண்டுமென்பதற்க்காக இதெல்லாம் செய்யாதீர்கள் தோழரே :D ...
கவிதை அருமை.

ஹேமா said...

சொன்ன விஷயமும் சொன்ன விதமும் அருமை சிவா.

உங்களை நீங்கள் புரிந்து வைத்திருக்கிறபடியால் நிச்சயம் செய்திகளுக்குள் அடங்கமாட்டீர்கள்.

ponsiva said...

நான் செய்திதாளில் வரவேண்டும் என்பது என் நோக்கம் அல்ல தோழி..

எல்லோரும் தினமும் செய்திதாள் படிக்க வேண்டும் என்பதே என் நோக்கம்...

கருத்துக்கு நன்றி

பின்தொடர்வோம்..
ஒருவர் பின் ஒருவராக

அன்புடன்

பொன்.சிவா

Muthu Pandi said...

Nanba Engayo Poga Pora....... Adu mattum Nalla Theriyudu..........
Varen Nanum innum konja nalla.......

Srividhya R said...

இது கவிதையா இல்ல நிஜமா?

Post a Comment