எங்கே போகின்றோம் நாம்.................
மனோவின் விமர்சனத்தில் தொடங்கி .....
க், த் என்று .... முழுதாய் தெரியாத
இலக்கியம் பேசி.....
பேக் வாட்டர் , பிரன்ட் வாட்டர் ... என்று
எடுத்துக்காட்டாய் ..
ஒரு சினிமா சொல்லி.....
பேச தொடங்கிய கருத்தை
பேசாமல் விட்டு...
எதோ ஒன்றை பேசும்..
நாமும்...
இங்கே தேவை இல்லாதவர்கள்தான்.....
தயை கூர்ந்து இங்கே.. யாரும்
என்னை அறிவாளி என்று
ஒப்புக்கொள்ளாதிர் .....
என்னை என்பது என்னை அல்ல ..
இதை எழுதும் என்னையும் ..
படிக்கும் உன்னையும் ....... தான் ....
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Wednesday, August 10, 2011
Saturday, August 6, 2011
எங்கேனும் எப்போதும்
எங்கேனும் எப்போதும்
நான் உன்னை சந்தித்தால்
என்ன செய்து விடுவேன்..
கீழ் காணுபவற்றை மீறி......?...
அநேகமாய் .........
அடித்துக்கொண்டிருக்கும் சிகரட்டை
மறைக்க எத்தனிப்பேன்...!
அநேகமாய் .........
உன் குழந்தையின் கன்னங்கள் கிள்ளி
பெயரென்ன என்று கேட்டுகொண்டிருப்பேன் .......
அநேகமாய்.....
நீ எங்கே .. இங்கே ? என்றும் ..
வினவியிருபேன் ......
அநேகமாய்....
உனக்கு தெரிந்தே இருந்தாலும்..
என்னை
'நல்லா இருக்கியா.....?'
என்றொரு கேள்வி நீ கேட்பாய்
என்று எண்ணி கொண்டுருந்திருப்பேன்........
இன்னும் ஆயிரம் அநேகமாய் .....
அடி மனதில் இருந்தாலும் .....
அவைகளை சொல்லாமல் ...
நான் விழி பிதுங்கி நிற்க
நீ சொல்லும்
'போயிட்டு வரேன் ' ..
எனக்கு போதுமானது......
Subscribe to:
Posts (Atom)