Saturday, August 6, 2011

எங்கேனும் எப்போதும்

எங்கேனும் எப்போதும்
நான் உன்னை சந்தித்தால்

என்ன செய்து விடுவேன்..
கீழ் காணுபவற்றை மீறி......?...

அநேகமாய் .........
அடித்துக்கொண்டிருக்கும் சிகரட்டை
மறைக்க எத்தனிப்பேன்...!

அநேகமாய் .........
உன் குழந்தையின் கன்னங்கள் கிள்ளி
பெயரென்ன என்று கேட்டுகொண்டிருப்பேன் .......

அநேகமாய்.....
நீ எங்கே .. இங்கே ? என்றும் ..
வினவியிருபேன் ......

அநேகமாய்....
உனக்கு தெரிந்தே இருந்தாலும்..
என்னை
'நல்லா இருக்கியா.....?'
என்றொரு கேள்வி நீ கேட்பாய்
என்று எண்ணி கொண்டுருந்திருப்பேன்........

இன்னும் ஆயிரம் அநேகமாய் .....
அடி மனதில் இருந்தாலும் .....
அவைகளை சொல்லாமல் ...
நான் விழி பிதுங்கி நிற்க

நீ சொல்லும்
'போயிட்டு வரேன் ' ..
எனக்கு போதுமானது......

1 comment:

அம்பாளடியாள் said...

கவிதை அருமை !..என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு வாருங்கள் என் தளத்திற்கும் உங்களை வரவேற்கின்றேன் .

Post a Comment