Friday, June 18, 2010

இராவணன் விமர்சனம்..


கதை, திரைகதை - வால்மீகி மற்றும் கம்பன்
வசனம் -சுகாசினி
இசை -ரகுமான்
ஒளிப்பதிவு -சந்தோஸ் சிவன் , மணிகண்டன்.
நடிப்பு
இராவணன்- விக்ரம் ,
ராமன்-பிரிதிவிராஜ்,
சீதை-ஐஸ்வர்யா ராய்,
அனுமன்- கார்த்திக் ,
கும்பகர்ணன் என்று வைத்துக்கொண்டால் - பிரபு.
சூர்பனகை-ப்ரியாமணி..

இயக்கம்-- மணி ரத்னம்

வழக்கமாய் மணி ரத்னம் தனது படங்களுக்கு கதைக்கு மெனக்கெட மாட்டார்..
திரைக்கதைக்கும் அதை காட்சிப்படுத்தளுக்குமே அதிகம் மெனக்கெட்டிருப்பார்.. ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த படத்தில் திரைக்கதையை கம்பனிடம் ஒப்படைத்துவிட்டு காட்சிப்படுதுதலில் மட்டும் கவனத்தை செலுத்தி அதை தன ஒளிபப்திவாளர்களின் திறமையுடன் செவ்வனே செய்தும் காட்டியுள்ளார்...

ஒவ்வொரு கட்சியும் பார்ப்பதற்கு ஐஸ்வர்யவைவிட அழகாய் இருக்கு...

கதையும் திரைக்கதையும் நமக்கு ஏற்கனவே பரிச்சயப்பட்டதல் .. நடித்தவர்களையும் இன்ன பிற விஷங்களையும் அலசுவோம் ...

விக்ரம்
மனுஷன் எங்கட நடிப்பு சோறு கிடைக்கும் என்றே பசியோடு அலைவார் போலும்.. க்ளைமாக்ஸ் சண்டையில் , ஐஸ்வர்யாவிடம் தன கூடவே இருக்க போட் ல சுத்திக்கிட்டே பேசும் இடம், இண்டர்வல் க்கு முன்னால் தன் போட்டோவை பார்த்து சிரிப்பது , ட்டன் ட்டன்ன்ன் , பக் பக் என்று கத்தும் போதும்,, மிரட்டும் போதும், கடைசியில் ஐஸ்வர்யா திரும்பி வரும் போது காட்டும் முகபாவம் எல்லாமே முதல் தரமான நட்டிப்புதான், என்றாலும்
இந்த தாகம் கொண்டு அலையும் நடிகனை மணிரத்தனம் சரியாக வேலை வாங்கவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது..

பிதாமகனிலும் , பீமாவிலும் இருந்த அந்த நெருப்பு இந்த நடிப்பில் சற்றே குறைவாதை எனக்குப்படுகிறது ..

அபிஷேக் அநேகமாய் விக்ரமை விட நல்லா நடிசிருப்பாருனு நினைக்கறேன்..
நண்பன் முத்துப்பாண்டி ஹிந்தியில் பார்த்துவிட்டு சொல்லும் வரை காத்திருப்போம் ..

ஐஸ்வர்யாராய்
படத்தில் அம்மணியின் ஆளுமைதான் அதிகம் .. காடு மலை எல்லாம் ஏறி இறங்கி கஷ்டப்பட்டு இருக்கார்..விக்ரமிடம் தான் இங்கேயே இருந்தால் அவரை விடு விடுகிறாயா என கேட்பது , ப்ரியாமணியின் பிளாஷ் பேக் கேட்டுவிட்டு சாமியிடம் பேசுவது .. அழுதாலும் சிரிச்சாலும் பாதி மார்பு தெரியும் படியே இருப்பது என தனக்கு கொடுத்த வேலையை நன்றாகவே செய்துள்ளார்....

விக்ரமுக்கும் சரி ப்ரிதிவிரஜ்க்கும் சரி இவருடன் நடிப்பதில் அது என்னோமோ சொல்லுவாங்களே வேதியிலோ இயற்பியலோ சற்றே குறைவுதான்.
இதிலும் அபிஷேக் முந்துவார் என்பது என் கணிப்பு ..


ப்ரிதிவி
கதையின் நாயகன் , கதாநாயகன் என்று இரு விஷயம் இருந்தால்.. ப்ரிதிவிராஜ் இந்தப்படத்தின் கதாநாயகன்.. அதாவது நல்லவனாக சித்தரிக்கப்பட்ட ராமன் கதாபத்திரம்.. இவர் எப்போதும் போலவே சிறப்பாக நடித்திருந்தாலும் கை அறுபட்டு தொங்கும் ஒருவனை அறுப்பட்ட கையையே நசுக்கி கோபப்படும் பொழுது நல்லா நடிச்சிருக்கார் .. இதை ஹிந்தியில் விக்ரம் நடிக்கிறாராம் அநேகமாய் விக்ரம் முந்திவிடுவார்.

கார்த்திக் & பிரபு
சொல்லிகொள்ளும் படி ஒன்றும் செய்யவில்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளனர்.. மரத்துக்கு மரம் தாவுவது , ஜீப்பில் மேல படுத்துக்கொண்டு பயணிப்பது, 'கண்டேன் ராகினியை" என்பதால் கார்த்திக் அனுமன்.. என் நேரமும் சாப்பாடு என்றிருப்பதால் பிரபு கும்பகர்ணன் ( அவருதாங்க என் நேரமும் தூங்குவரம்ல...)

ப்ரியாமணி
பரிதி வீரனில் அமீர் காட்சிப்படுத்தி நம்மை கதற வைத்ததை , இந்த படத்தில் ப்ரியாமணி நடித்தே காட்சிப்படுத்துகிறார்... ஆனாலும் தியேட்டரில் பருத்தி வீரனின் வசனத்தை கத்தினார்கள் .... ஒரு வேலை அந்த படத்தை நினைத்தே நடிதிருப்பரோ என்னோவோ ..

இசை -
பாடல்களை விட ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது..
அதும் கடைசியில் விக்ரமை சுடும் போது வேறு இசை இல்லாமல் வெறும் குண்டு துளைக்கும் சப்தம் மட்டும் கொடுத்ததில் அந்தக்காட்சியின் இறுக்கம் அதிகரித்தது..

ஒளிப்பதிவு..
இவர்கள் இல்லையெனில் இந்த படம், பப்படம் ஆகியிருக்கும் ..

வசனம்
சுகாசினி அவர்களே.. படத்திற்கு வசனம் அதிக தேவை இல்லைதான் ... தேவை படும் போதாவது நல்லா இருக்க வேணாமா... சுஜாதா சார் வசனம் எழுதும்பொழுதே மணிரத்னம் படம் என்றால் பக்கத்துக்கு சீட்ல இருக்க ஆளுகிட்ட கேட்டுத்தான் நானெல்லாம் புரிஞ்சுக்குவேன்..
உங்கள தராசின் ஒரு பக்கத்தில் உக்கார வச்சாலும் அடுத்த பக்கம் உக்கார வைக்க தமிழ் திரை உலகில் ஆள் இல்லை என்பதால் .... உங்களை வசனம் எப்படி எழுதுவது என கற்றுக்கொள்ள அண்ணன் பேரரசுவிடம் செல்லுங்கள் எனப்பனிக்கிறேன்...

இயக்கம்

மணிரத்தினத்தின் அணைத்து படைப்புகளும் எனக்குப்பிடிக்கும்.. இந்த படமும் நல்லாத்தான் இருக்கு....

மணிரத்னம் அவர்களே இந்தப்படத்தில் நீங்கள் ஒரு படைப்பாளியாக என்ன செய்து உள்ளீர்கள் என்பதுதான் என் ஆதங்கக் கேள்வி..! உங்களிடம் கேட்க என்னிடம் நிறைய கேள்விகள் உள்ளது அதை ஒரு தனிப்பதிவாக எழுதுகிறேன் .

படம் பார்த்து விட்டு வெளியில் வந்த உடன் அடுத்த ஷோ விற்கு நிற்கும் ரசிகன் என்னிடம் கேட்டான்...
படம் எப்படி இருக்கு என்று .....
நான் ' பார்க்கலாம்' என்றேன்..

நான் 'சூப்பர இருக்குனு ' சொல்லியிருக்க வேண்டாமா ..!

நீதி---தியேட்டருக்குப் போய் பார்க்க வேண்டிய படம் தான்....

8 comments:

இராகவன் நைஜிரியா said...

நல்லாவே விமர்சனம் பண்ணியிருக்கீங்க. விமர்சனத்திலும் வித்யாசம் தெரிகின்றது.

மணி ரத்தினத்தின் படங்களை மிகவும் ரசித்து பார்ப்பீர்கள் என புரிகின்றது. இந்த படம் மணி ரத்தினத்தின் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் என நினைக்கின்றேன்.

Vediyappan M said...

நல்ல விமர்சனம். படத்தின் எல்லா பகுதிகளையும் அலசி எழுதியிருக்கிறீகள்.

Subankan said...

இன்று மாலைதான் படத்தைப் பார்க்கப்போகிறேன். அனைவரும் மெச்சும் ஒளிப்பதிவுக்கும், இசைக்குமாகவாவது பார்த்தே தீரவேண்டும். நல்ல விமர்சனம் :)

Ram said...

Already watched the movie yesterday, normal, not so new as we already know the bottom line. if mani killed the prithivi Raj and left the Aiswarya then it will be well know story of the today. so it goes to the credit of Valmiki and Kampan

Muthu Pandi said...

Innum neraya tamil varthaya pottu vimarchanam Eldu nanba.......... Super

KUTTI said...

SIVA,


VERY VERY NICE REVIEW.

ALL THE BEST.


MANO

shortfilmindia.com said...

நல்லாருக்கு..:)

கேபிள் சங்கர்

Unknown said...

pathiuv ulagathil oru vithiyasamana vimarsana muyarichi, nalla iruku unga vimarsanam, vaalthukkal. ithu mathiri unmai vimarsanam paddichu palla maatham agi vittathu,

Post a Comment